Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 4, Verse 33

ஶ்ரேயான்த்3ரவ்யமயாத்3யஞ்ஞாஜ்ஞானயஞ்ஹ ப1ரந்த11 |

ஸர்வம் க1ர்மாகி2லம் பா1ர்த ஞானே ப1ரிஸமாப்1யதே1 ||33||

ஶ்ரேயான்—--உயர்ந்த; த்ரவ்ய-மயாத்—--பொருளுடைமைகளின்; யஞ்ஞாத்–---யாகத்தை விட ஞான—யஞ்ஞஹ--– ஞானத்தில் செய்யும் யாகம்; பரந்தப----எதிரிகளை அடக்குபவனே, அர்ஜுனா; ஸர்வம்----அனைத்து கர்ம—செயல்களும்; அகிலம்--—அனைத்து; பார்த----ப்ரிதாவின் மகனே, அர்ஜுனா ஞானே----தெய்வீக அறிவில்; பரிஸமாப்யதே---முடிவடைகின்றன

Translation

BG 4.33: எதிரிகளை அடக்குபவனே, எந்த விதமான உடல் அல்லது பொருள் தியாகத்தை விட அறிவுடன் செய்யப்படும் யாகம் மேலானது. ஓ பார்த்தா. இறுதியில் அனைத்து தியாகங்களும் தெய்வீக அறிவில் முடிவடைகின்றன.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது முன்பு விவரிக்கப்பட்ட தியாகங்களை சரியான கண்ணோட்டத்தில் வைக்கிறார். அவர் அர்ஜுனிடம் பக்தியின் உடல் ரீதியான செயல்களைச் செய்வது நல்லது, ஆனால் போதுமானதாக இல்லை என்று கூறுகிறார். சடங்கு சம்பிரதாயங்கள், விரதங்கள், மந்திரம் உச்சரித்தல், புனித யாத்திரைகள் மற்றும் பிற நுட்பங்கள் அனைத்தையும் சரியான அறிவுடன் செய்யாவிட்டால் வெறும் செயல்பாடுகளாகவே இருக்கும். எதனையும் செய்யாமல் இருப்பதை விட இது போன்ற இயந்திரத்தனமான செயல்பாடுகள் சிறந்ததாக இருந்தாலும், அவை மனதை தூய்மைப்படுத்த போதுமானதாக இல்லை. இருப்பினும், புனித கபீர் இந்தக் கருத்தை மிகத் தெளிவாக நிராகரிக்கிறார்:

மாலா ஃபே2ரத்1 யுக3 ஃபி2ரா, ஃபிரா ந மன் கா1 ஃபே2ர்.

1ர் கா1 மனகா1 டா3ரி கே1 மனகா1மனகா1 ஃபே2ர்.

‘நீங்கள் பலகாலமாக ஜெபமாலையை உருட்டிக்கொண்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தீர்கள். இப்பொழுது ஜெபமாலையை வைத்து மனதின் மணிகளை உருட்டுங்கள்.’ ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் கூறுகிறார்:

3ந்த4ன் ஔர் மோக்ஷ கா1, கா1ரண் மனஹி ப3கா2ந்

யாதே2 கௌ1னியு ப4க்1தி11ரு, க1ரு மன் தே1 ஹரித்4யான்

(ப4க்1தி1 ஶத1க்1 வசனம் 19)

‘பந்தத்திற்கும் விடுதலைக்கும் காரணம் மனம். நீங்கள் எந்த வகையான பக்தியை செய்தாலும், கடவுளை தியானிப்பதில் உங்கள் மனதை ஈடுபடுத்துங்கள்.'

அறிவை வளர்ப்பதன் மூலம் பக்தி உணர்வுகள் வளர்கின்றன. உதாரணத்திற்கு, இது உங்கள் பிறந்தநாள் விழா என்று வைத்துக்கொள்வோம், மக்கள் வந்து உங்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். யாரோ ஒருவர் வந்து ஒரு கந்தல் பையைக் கொடுக்கிறார். நீங்கள் பெற்ற மற்ற அற்புதமான பரிசுகளுடன் ஒப்பிடுகையில் இது அற்பமானது என்று நினைத்து நீங்கள் அதை அலட்சியமாகப் பார்க்கிறீர்கள். அந்த நபர் பையின் உள்ளே பார்க்கும்படி கேட்கிறார். நீங்கள் அதைத் திறந்து, இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள நூறு ரூபாய் நோட்டுகளின் அடுக்கைக் காண்கிறீர்கள். நீங்கள் உடனடியாக பையை உங்கள் மார்பில் கட்டிப்பிடித்து, 'இது நான் பெற்ற சிறந்த பரிசு’ என்று கூறுகிறீர்கள். பைக்குள் இருந்த பொருளின் பற்றிய அறிவு பொருளின் மீதான அன்பை வளர்த்தது. அதுபோலவே, கடவுளைப் பற்றிய அறிவையும், அவருடனான நமது உறவையும் வளர்ப்பது பக்தி உணர்வுகளை வளர்க்கிறது. எனவே, ஜடப் பொருள்களின் தியாகத்தை விட, அறிவால் செய்யப்படும் தியாகங்கள் மேலானவை என்று ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்குகிறார். அவர் இப்போது அறிவைப் பெறுவதற்கான செயல்முறையை விளக்குகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
4. ஞான கர்ம ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!